திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
திருநங்கையர் வாழ்வையும் அவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் ‘காகிதப்பூக்கள்’ என்ற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் லதாசரவணன். இவர் தேவி, கண்மணி, இதயநிலா உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல்களும் தொடர்கதைகளும் எழுதி வருவதுடன் 15க்கும் மேற்பட்ட நாவல்களை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
2011 டிசம்பர் 21 புதன்கிழமையன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் காகித பூக்கள் நாவலை வெளியிட அதனை திருநங்கை மலாய்க்கா பெற்றுக்கொண்டார். விழாவில் சமூகசேவகி ஆனந்தியம்மாள், பொதிகை தொலைக்காட்சி நிர்வாகி பாலரமணி, இயக்குநர் தருண்கோபி, காவல்துறை அதிகாரி மாடசாமி, எழுத்தாளர் கயல்தினகரன், பத்திரிகையாளர் கோவி.லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை நிலவரசன் தொகுத்து வழங்கினார். நூலாசிரியரின் கணவர் சரவணக்குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

No comments:
Post a Comment