பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து காலையில் புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அரியலூருடன் ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து புறப்பட்ட வைகை ரயில் திருச்சி சந்திப்புடன் நிறுத்தப்பட்டது.
திருச்சி - சென்னை இடையேயான சோழன் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரவேண்டிய விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டது. ரத்தான ரயில்களுக்கான கட்டணங்களை திருப்பித்தர ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
No comments:
Post a Comment